Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை: முஷாரப்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை: முஷாரப்
லண்டன் , ஞாயிறு, 10 அக்டோபர் 2010 (12:44 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு பய‌ற்‌சி அ‌ளி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று அ‌ந்நா‌ட்டு மு‌ன்னா‌ள் அ‌திப‌ர் முஷார‌ப் ‌திடீரென ப‌ல்டி அ‌டி‌த்து‌ள்ளா‌ர்.

லண்டனில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்ததோடு அவரு‌க்கு கடு‌ம் க‌ண்டன‌‌ம் தெ‌ரி‌வி‌த்‌‌திரு‌ந்தது.

இந்நிலையில் தான் கூறிய கருத்தில் இருந்து முஷாரப் திடீரென பல்டி அடித்துள்ளார். இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க வில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil