Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலிகளை முற்றிலும் தோற்கடித்ததாகக் கருத முடியாது : இலங்கை

Advertiesment
புலிகளை முற்றிலும் தோற்கடித்ததாகக் கருத முடியாது : இலங்கை
கொழும்பு , திங்கள், 20 ஜூலை 2009 (17:18 IST)
விடுதலைப் புலிகளை முற்றிலும் தோற்கடித்துவிட்டதாகக் கருதமுடியாது என்று இலங்கை பாதுகாப்புத்துறையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடபாக தொலைக்காட்சி ஒன்றுக்கு கெஹலிய ரம்புக்வெல அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :

விடுதலைப் புலிகளுடன் ராணுவ ரீதியான போர் முடிந்துவிட்டாலும், அவர்களை முற்றிலும் அழித்துவிட்டதாகக் கருத முடியாது. இருப்பினும், எதிர்காலத்தில் யாரும் ஆயுதங்களை ஏந்த முடியாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வான்படை உள்பட உலகில் எந்தவொரு இயக்கமும் கொண்டிராத இல்லாத பலத்தை புலிகள் பெற்றிருந்தார்கள்.ஆனாலும், அவர்களை இலங்கை ராணுவம் வெற்றி கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகள் மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான்.

இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil