Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்மோகன் சிங் அறிவாளி; சிறந்த மனிதர்: ஒபாமா

Advertiesment
மன்மோகன் சிங் அறிவாளி; சிறந்த மனிதர்: ஒபாமா
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த மனிதர்; மரியாதை தெரிந்தவர்; அறிவாளி என அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா புகழ்ந்துள்ளார்.

லண்டனில் நடந்த ஜி-20 மாநாட்டில் அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் முதன் முறையாக சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங் தேர்ந்த அறிவாளி; சிறப்பான, மரியாதை தெரிந்த மனிதர் எனப் புகழ்ந்தார்.

பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னதாகவே இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர் என்றார்.

இதன் பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இந்தியாவில் உங்களுக்கு (ஒபாமா) மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளத” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil