Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புது‌க்குடியிருப்பு மோதல் : மூன்று நாட்களில் 1,000 படையினர் பலி - புலிகள்

Advertiesment
புது‌க்குடியிருப்பு மோதல் : மூன்று நாட்களில் 1,000 படையினர் பலி - புலிகள்
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (21:04 IST)
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்க ராணுவம் மேற்கொண்டுள்ள பெரும் படையெடுப்பிற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 1,000 படையினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்க ராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளும், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு-3, 4 ஆகிய படையினரும் புதுக்குடியிருப்புப் பகுதியை கைப்பற்ற ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனைகளில் இருந்து முன்னேறும் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூன்று நாள் சண்டையில் இதுவரை 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,000க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளதாகவும், புலிகளின் சமர் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்ததாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பகுதியில், படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சண்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil