Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொலிவியாவில் பேருந்து விபத்து: 14 பேர் பலி

Advertiesment
பொலிவியாவில் பேருந்து விபத்து: 14 பேர் பலி
பொலிவியாவின் ஒருரோ நகருக்கு அருகே 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டின் நிர்வாகத் தலைநகரான லா பாஷ்ஷில் இருந்து 220 கி.மீ தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேசிலின் அண்டை நாடான பொலிவியாவில், மக்கள் போக்குவரத்திற்கு பேருந்துகளே முதுகெலும்பாகத் திகழ்கின்றன. எனினும், அந்நாட்டில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி பேருந்துகள் விபத்துக்குள்ளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil