Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

Advertiesment
இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
, சனி, 1 நவம்பர் 2008 (16:16 IST)
டெல்லியில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகள் ப‌ங்கே‌ற்கு‌‌ம் மாநாடு வருகிற 11ஆ‌ம் தே‌தி முதல் 14ஆ‌ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.

அப்போது, இந்தியத் தலைவர்கள் ராஜபக்சேவுடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிபர் ராஜபக்சே சந்திப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil