Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் 11 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி!

Advertiesment
பாகிஸ்தானில் 11 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:44 IST)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாரியின் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 11 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லோதர்ன் என்ற இடத்திற்கு அருகே இன்று காலை நடந்த இந்த சாலை விபத்தில் 25 பேர் காயமடைந்ததாகவும், இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்றும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேருந்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், இதில் பெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மேலும் விபத்துக்கு உள்ளான பேருந்து முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil