Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 3 March 2025
webdunia

சுதந்திர தினம்: 35 இந்தியர்களை விடுவிக்கிறது பா‌கி‌ஸ்தா‌ன்!

Advertiesment
சுதந்திர தினம்: 35 இந்தியர்களை விடுவிக்கிறது பா‌கி‌ஸ்தா‌ன்!
இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள 35 இந்தியர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவிக்க முடிவு செய்துள்ளது.

34 மீனவர்கள் மற்றும் ஒரு இந்திய பிரஜை என 35 பேர் விடுவிக்கப்பட உள்ளதாகவும், இதில் மீனவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி கைது செய்யப்பட்டவர்கள் எ‌ன்று‌ம் பாகிஸ்தானில் வெளியாகும் டெய்லி டைம்ஸ் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படும் 35 இந்தியர்களும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா சோதனைச் சாவடியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படுவர் என பாகிஸ்தான் அரசை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil