Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெற்காசியாவில் அமைதிக்கு பாடுபடுவோம்-மன்மோகன்!

Advertiesment
தெற்காசியாவில் அமைதிக்கு பாடுபடுவோம்-மன்மோகன்!
, சனி, 17 மே 2008 (10:51 IST)
பூட்டானில் மக்களாட்சி மலர்ந்த பிறகு கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகையில், தெற்காசியப்பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தியா பாடுபடுபடும் என்றார்.

2 நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ள மன்மோகன் சிங் பூட்டானுக்கு இந்தியா பக்க பலமாக விளங்கும் என்றார். மேலும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பூட்டானுக்கு வருகை தந்த 50ஆம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே ரயில்வே இணைப்பு முதலில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

பூட்டான் புதிய நாடாளுமன்றத்தில் முதன் முதலாக உரையாற்றும் சர்வதேசத் தலைவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil