Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்னாரில் கடும் மோதல் : 30 ராணுவத்தினர் பலி!

Advertiesment
மன்னாரில் கடும் மோதல் : 30 ராணுவத்தினர் பலி!
, ஞாயிறு, 13 ஏப்ரல் 2008 (13:53 IST)
இலங்கையின் வடபகுதியான மன்னாரில் சிறிலங்க ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் 30 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 75 பேர் காயமடைந்துள்ளனர்.

எறிகணை வீச்சு, விமானத் தாக்குதல் என்று நான்கு திசைகளில் இருந்து முன்னேறிய சிறிலங்க படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்க படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களில் 30க்கும் அதிகமான சிறிலங்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.

தங்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil