Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை 518 புள்ளிகள் அதிகரிப்பு!

பங்குச் சந்தை 518 புள்ளிகள் அதிகரிப்பு!

Webdunia

, புதன், 3 அக்டோபர் 2007 (20:47 IST)
அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்ததால், இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 518.42 புள்ளிகள் (2.99 விழுக்காடு) அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 141.85 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை குறியீட்டு எண் கணக்கிட பயன்படுத்தும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்., இன்போசியஸ்., ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி., ஆர்.காம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தன.

அம்புஜா சிமென்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர்., சிப்லா, ரான்பாக்ஸி ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் இறுதி நிலவரம்.

சென்செக்ஸ் 17847.04 (17,328.62) (518.42 புள்ளிகள் உயர்வு)
தேசிய பங்குச் சந்தை நிப்டி 5210.80 (5068.95) (141.85 புள்ளிகள் உயர்வு)

Share this Story:

Follow Webdunia tamil