Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.ஒ.சி.எல் திருச்சி பெல்லுக்கு ரூ.430.50 கோடிக்கு ஆணை!

ஐ.ஒ.சி.எல் திருச்சி பெல்லுக்கு ரூ.430.50 கோடிக்கு ஆணை!

Webdunia

, சனி, 7 ஜூலை 2007 (18:44 IST)
இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.எல்) வதோதரா திட்டத்துக்கான ரூ430.50 கோடி பணி ஆணையை திருச்சி பாரத மிகுமின் நிறுவனம்(பெல்) பெற்றுள்ளது.

குஜராத் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் படிவுகள் மேம்பாடு மற்றும் தர மேம்பாட்டு திட்டத்துக்காக வாயுச் சூழலிகள் வெப்ப மீட்பு நீராவி உற்பத்தி அமைப்புகளை வடிவமைத்து, தயாரித்து அளித்து, நிறுவி இயக்கி வைப்பதற்காக இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பாரத மிகுமின் நிறுவனத்தின் திருச்சி பிரிவு ஒரு மணநேரத்துக்கு 100 டன் திறனுடைய இரு வெப்ப மீட்பு நீராவி உற்பத்தி அமைப்புகளை தயாரித்து வழங்க இருக்கிறது. ஹைதராபாத் பிரிவு வாயுச் சூழலிகளை தயாரித்து வழங்கும்.

மேற்கண்ட தகவலை திருச்சி பெல் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil