Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

Advertiesment
இந்திய பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

Webdunia

, வியாழன், 14 ஜூன் 2007 (14:54 IST)
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாக இந்திய பங்குச் சந்தைகளிலும் முதலீடு அதிகரித்ததை அடுத்து மும்பை பங்குச் சந்தை குறியீடு தற்பொழுது 185 புள்ளிகள் உயர்ந்து முன்னேற்றத்தில் உள்ளது!

இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் துவங்கியதுமே மும்பை பங்குச் சந்தை குறியீடு மளமளவென்று 135 புள்ளிகள் அதிகரித்து 14,410 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேபோல, தேச பங்குச் சந்தையிலும் முன்னேற்றம் காணப்பட்டது. 1 மணி வரை 150 புள்ளிகள் உயர்ந்திருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு மேலும் உயர்ந்து தற்பொழுது 14,188 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

தேச பங்குச் சந்தை குறியீடு 52.60 புள்ளிகள் உயர்ந்து 4,166 புள்ளிகளாக உள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., பெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல்.அண்ட்.டி., ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ., சன் ஃபார்மா, ஓ.என்.ஜி.சி. ஆகிய பங்குகள் முன்னேற்றத்தில் உள்ளன.

மகாராஷ்ட்ரா சீம் லெஸ், ஜிண்டால் ஸ்டீல், சீசா கோவா, செய்ல், ஸ்டெர்லிங் இன்டஸ்ட்ரீஸ், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஸ்பார்ட் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகளும் ஏற்றத்தில் உள்ளன. இந்த நிலை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (யு.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil