Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப். 7 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது

Advertiesment
பிப். 7 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது
, புதன், 4 பிப்ரவரி 2009 (11:21 IST)
பிப்ரவரி 3ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதாக மழை ராஜ் தெரிவித்துள்ளார்.

மழை பற்றி ஆய்வு செய்து எமது வெப்துனியா.காமிற்கு மழை ராஜ் அனுப்பியுள்ள ஆய்வுக் குறிப்பில், நேற்றைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் இதர பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இதே தேதிகளில் கடல் சீற்றலும் அதிகம் காணப்படும். நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி பிப்ரவரி மாதம் 8, 14, 25 ஆகிய தேதிகளில் மிதமானது முதல் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. சேதம் ஏற்படும் அளவிற்கு நிலநடுக்கம் இருக்க வாய்ப்பும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil