Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்கு சந்தை: சென்செக்ஸ் 202 புள்ளிகள் உயர்வு

பங்கு சந்தை: சென்செக்ஸ் 202 புள்ளிகள் உயர்வு
, புதன், 7 செப்டம்பர் 2011 (17:23 IST)
மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக இறுதியில் 202.19 புள்ளிகள் உயர்வுடன் 17,065.00 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 60.35 புள்ளிகள் உயர்ந்து 5124.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஜிந்தால் ஸ்டீல், சிப்லா, எல் அண்ட் டி, எஸ்பிஐ,. ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, விப்ரோ, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, இந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil