Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்வு!

Advertiesment
பங்குச் சந்தை: சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்வு!
, புதன், 9 ஏப்ரல் 2008 (17:21 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்திருந்த குறியீட்டு எண்கள் சிறுது நேரத்திலேயே அதிகரிக்க தவங்கின.

அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நிஃப்டி நேற்றைய இறுதி நிலவரத்தை விட குறைந்தது. ஆனால் அதற்கு பிறகு அதிகரித்தது.

அமெரிக்கா மற்ற ஆசிய, ஐரோப்பிய நாடு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 202.89 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,790.51 ஆக உயர்ந்தது. இதே போல் பி.எஸ்.இ. 500- 81.75, சுமால் கேப் 126.94, மிட் கேப் 88.49 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 37.40 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 4747.05 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 136.90, சி.என்.எக்ஸ்.100-41.60, சி.என்.எக்ஸ்.டிப்டி 29.45, சி.என்.எக்ஸ். 500-37.30, பாங்க் நிஃப்டி 196.85, சி.என்.எக்ஸ். மிட் கேப் 77.45, சி.என்.எக்ஸ். மிட் கேப்50-27.30 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி62.80 குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,829 பங்குகளின் விலை அதிகரித்தது, 794 பங்குகளின் விலை குறைந்தது, 66 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.54%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.03%, தொழில்நுட்ப பிரிவு 0.06%, உலோக உற்பத்தி பிரிவு 1.73%, வாகன உற்பத்தி பிரிவு 0.05%, வங்கி பிரிவு 3.01%, மின் உற்பத்தி பிரிவு 2.74%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.05%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 2.66% அதிகரித்தன.

அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் 1.59% குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil