Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச் சந்தை 328 புள்ளிகள் உயர்வு!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை 328 புள்ளிகள் உயர்வு!
, வெள்ளி, 23 நவம்பர் 2007 (19:07 IST)
மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் மீண்டும் சுறு சுறுப்பானது. பங்குச் சந்தைகளில் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து குறியீட்டு எண்கள் குறைந்து வந்தன. இன்று காலையில் மீண்டும் பழைய படி பங்குகளின் விலைகள் அதிகரிக்க துவங்கின.

மும்பை பங்குச் சந்தையில் ஒரு நிலையில் சென்செக்ஸ் 384 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 18,910.46 புள்ளிகளை தொட்டது. மாலை வர்த்தகம் முடிவடையும் நேரத்தில் நேற்று மாலை இறுதி நிலவரத்தை விட 326.55 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 18,852.87 புள்ளிகளாக முடிந்தது.

இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தது.

இதே போல் மிட்கேப் 137.66, சுமால் கேப் 110.56, பி.எஸ்.இ-500 131.36 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 89.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,608.60 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் வங்கி பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் இன்போசியஸ், எல்.அண்ட்.டி, என்.டி.பி.சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எப்.சி, ஹிந்துஸாதான் யூனிலிவர், சத்யம், எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டி.சி.எஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

ரான்பாக்ஸி, சிப்லா, கிரேசம், ஹெச்..டி.எப்.சி வங்கி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil