Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை பங்குச் சந்தை 878 புள்ளிகள் உயர்வு!

மும்பை பங்குச் சந்தை 878 புள்ளிகள் உயர்வு!

Webdunia

, செவ்வாய், 23 அக்டோபர் 2007 (20:21 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் இன்று மட்டும் 878 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 287.70 புள்ளிகள் உயர்ந்தது!

அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் பார்சிபேட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கட்டுப்படுத்தப்படும். இதற்கான விதிமுறைகள் வகுக்ககப்படும் என பங்குச் சந்தை கட்டு்பபாட்டு வாரியம் செபி சென்ற வாரம் புதன் கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்தன. மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் புதன் கிழமை அதிகளவு சரிந்தது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் செபியின் விதிகளின் படி, இரு பங்குச் சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

கடந்த ஒரு வாரம் முழுவதும் பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்தன. இதனால் குறியீட்டு எண்களும் குறைந்தது.

இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று சிறிது முன்னேற்றம் இருந்தது. நேற்று 54 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று காலையிலேயே பங்குச் சந்தை சுறுசுறுப்பாக இருந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, மாலை வரை குறியீட்டு எண் அதிகரித்த வண்ணம் இருந்தது. இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 878 புள்ளிகள் அதிகரித்து 18,492.84 புள்ளிகளாக முடிந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 17,613.99)

மிட் கேப் 292.83 புள்ளிகளும், சுமால் கேப் 284.25 புள்ளிகளும் அதிகரித்தன. பி.எஸ்.இ 100 பிரிவு 496.22 புள்ளிகள், பி.எஸ்.இ 200 2,251.15 புள்ளிகள், பி.எஸ்.இ 500 பிரிவு 351.90 புள்ளிகள் அதிகரித்தன,.

தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே நிப்டி 155 புள்ளிகள் அதிகரித்தன. அதிகளவு ஏற்ற இறக்கம் இல்லாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இறுதியில் 287.70 புள்ளிகள் அதிகரித்து 5473.70 புள்ளிகளாக முடிந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 5184.00). தேசிய பங்குச் சந்தையின் மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.












Share this Story:

Follow Webdunia tamil