Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்க்கரை ஏற்றுமதி மானியம் நிறுத்தம்!

Advertiesment
சர்க்கரை ஏற்றுமதி மானியம் நிறுத்தம்!
, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (18:43 IST)
சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி மானியம் நிறுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மும்பையில் இன்று தேசிய பங்குச் சந்தையில் அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகத்தை சிதம்பரம் துவக்கி வைத்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதை நிறுத்துவது குறித்து ஏற்கனவே விவசாய அமைச்சகத்துடன் விவாதித்து உள்ளேன். இனி சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து 2008-09 ஆம் ஆண்டில் 42 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுத்திகரிக்கப்படாத 22 லட்சம் டன் சர்க்கரையும் அடங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil