Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளிவைக்கப்பட்ட தேர்வு 24-ல் நடைபெறும்!

தள்ளிவைக்கப்பட்ட தேர்வு 24-ல் நடைபெறும்!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (15:48 IST)
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பள்ளிகளில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இன்று காலாண்டுத் தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கபட்டு இருந்தது. தற்போதைய விடுமுறையால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

இத்தேர்வுகள் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என்று முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில பள்ளிகளில் இத்தேர்வு 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil