Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரசில் இணைந்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா..!!

Advertiesment
sharmila
, வியாழன், 4 ஜனவரி 2024 (11:21 IST)
ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
 
ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். இந்நிலையில்,  தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. 


இதையடுத்து,  கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில், “தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.  தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்திருந்தார்.
 
கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால்,  ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது என அவர் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அதேபோல தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் விபரீதம்.. சுட்ட மாணவனின் கழுத்தில் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு..!