Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Siva
திங்கள், 20 மே 2024 (06:34 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில், பாஜகவுக்கு 8 முறை வாக்களித்து வீடியோ பதிவிட்ட விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
8 முறை வாக்கு செலுத்தி வீடியோ வெளியிட்ட ராஜன் சிங் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்தவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களாகவே இளைஞர் ஒருவர் எட்டு முறை வாக்களித்ததாக வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியான நிலையில் அந்த வீடியோவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் இப்படித்தான் பாஜக முறைகேடு செய்து ஆட்சியைப் பிடித்து வருகிறது என்று விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போல் மேலும் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவுக்காக ராயப்பேட்டை கோவில்கள் இடிக்கப்படுகிறதா? நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்..!

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு! – நீதிமன்றம் சொல்லும் காரணம் என்ன?

கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வுக் கூடம்! - சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய ஆய்வகம்!

கனமழை எதிரொலி: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று: மழை குறித்த எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments