Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடையூறு பண்ணுனா இறுதி ஊர்வலம்தான்! – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (12:13 IST)
சமீபத்தில் திருமணத்திற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கூறிய நிலையில் லவ் ஜிகாதிற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக முதல் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து ஆணை மணப்பதற்காக ஒரு மாதம் முன்னதாக மதம் மாறியுள்ளார். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி பேசியுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் “மாநிலத்தில் இந்து பெண்களை பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடுமையான சட்டம் விரைவில் இயற்றப்படும். எங்கள் சகோதரிகளின் மாண்பையும், பெருமையும் குலைக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் பெண்களுக்கு இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments