Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்களுக்கு வாய்ப்பு! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:49 IST)
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வி துறை புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆளுனரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிலேயே இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2017ம் ஆண்டு முதல் அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களை தொடர்பு கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments