Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

Siva
திங்கள், 27 மே 2024 (08:42 IST)
கேரளாவில் மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் கேரளாவில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதனை அடுத்து கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட ஆறு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் கேரளாவில் இதுவரை பெய்த மழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 59 பேர் வீடுகளை முழுமையாகவும் 539 பேர் வீடுகளை பகுதியாகவும் இழந்துள்ளனர் என்றும் தொடர் மழை பெய்வதால் கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments