Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை முயற்சி!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (12:54 IST)
கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக செல்லும் போது ஆம்புலன்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை முயன்றுள்ளார்.  
 
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
ஏற்பாட்டின் படி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.  
 
இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்தார். அந்த பெண் நடந்ததை தனது சிகிச்சை கொடுக்க வந்த மருத்துவரிடம் இதைப்பற்றி கூற இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், நேற்று அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வார்டில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். ஆனால், கதவை உடைத்துக்கொண்டு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மீட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்