Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை திறக்க வேண்டும்; எம்.எல்.ஏ க்களின் கோரிக்கை

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (13:11 IST)
ஜார்கண்ட் சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என அம்மாநில  எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் அம்மாநிலத்தின் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் மாநிலத்தில் உள்ள மது கடைகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது. பின் அனுமதிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே மது பானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அரசு கடைகளும் ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பதால் மது வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும், இதனால் தேவையற்ற பிரச்னைகளும் கைகலப்புகளும் உருவாகுவதாகவும் அம்மாநில எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சட்டசபை வளாகத்திற்குள் மதுபான கடையை திறக்க வேண்டும் எனவும் வரும் 12-ம் தேதிசட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் போது இதுகுறித்து முதல்வர் ரகுபர் தாஸிடம் முறையிடப்போவதாகவும் எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர். இந்த கோரிக்கைக்கு முக்கிய எதிர்கட்சியான ஜார்கண்ட் முகதி மோர்ச்சா ஆதரவளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments