Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் தலைவராக வாய்ப்பிருக்கிறதா?? மத்திய அமைச்சரின் பதில் என்ன?

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (16:08 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக பிரியங்கா காந்திக்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ஆனால் இன்னும் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படாத நிலையில், ஒரு வேளை ஏற்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பிரியங்கா காந்திக்கு வாய்ப்புள்ளதா? என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான நட்வர் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நட்வர் சிங், தலைவர் பதவி தொடர்பாக பிரியங்கா காந்திதான் தீர்மானிக்க வேண்டும் எனவும், மேலும் காங்கிரஸின் அடுத்த தலைவராக நேரு குடும்பத்திலிருந்து வராத வேறு யாராவது கூட வரலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவிலிருந்து அவரது குடும்பம் பின்வாங்க வேண்டியதாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments