Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் மீது கொலை வெறி தாக்குதல் : துப்பாக்கி காட்டி விரட்டிய மனைவி (வீடியோ)

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (17:45 IST)
தன் கணவன் மீது திடீர் தாக்குதல் தொடுத்த மர்ம கும்பலை துப்பாக்கி காட்டி விரட்டி பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவாட்டத்தில் உள்ள ககோரி எனும் பகுதியில் காலை நேரம் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரெனெ அவரை தாக்கியது. முதலில் கையில் அடித்த அவர்கள், பின்னால் உருட்டு கட்டையால் தாக்க தொடங்கினர்.
 
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அவர்களின் தாக்குதலால் நிலை குலைந்தார். அப்போது, அவரின் மனைவி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை காட்டி மிரட்ட அவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments