Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாவில் ரீல் போட்டதை கண்டித்த கணவன்.. மனைவியும் மாமியாரும் சேர்ந்து செய்த கொலை..!

Siva
செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:37 IST)
இன்ஸ்டாவில் ரீல் போட்டதை கண்டித்து கணவனை அவரது மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து கொலை செய்த சம்பவம்  பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஸ்வர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணிகுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல் பதிவு செய்வதை  வழக்கமாக கொண்டு உள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் இதை கண்டு கொள்ளாததாக மகேஸ்வர் ஒரு கட்டத்தில் மனைவியை கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது அம்மா வீட்டுக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் சில நாள் கழித்து மனைவி ராணி குமாரியை அழைத்து வர மகேஷ்வர் சென்றார். அப்போது கூட அவர் இன்ஸ்டாவில் ரீல் செய்வதில்லையே கவனம் செலுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இருவருக்கும் சண்டை வந்த நிலையில் திடீரென மனைவி ராணிகுமாரி மற்றும் மாமியார் ஆகிய இருவரும் சேர்ந்து மகேஸ்வரை கழுத்தை அழுத்தி கொலை செய்துள்ளனர்.  இது குறித்த தகவல் காவல்துறைக்கு சென்றபோது ராணி குமாரி மற்றும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்த முடியாது! ஹெஸ்புல்லாவை ஒழிச்சுட்டுதான் ஓய்வு! - இஸ்ரேல் பிரதமர் உறுதி!

அதிகாரம் கிடைக்கும் வரை கூட்டணிதான் பாதுகாப்பு! - திருமாவளவன்!

5,500 கிலோ கலப்பட நெய் தயாரித்த கம்பேனி! மொத்தமாக சீல் வைத்த அதிகாரிகள்!

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments