Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு படையெடுத்து வரும் மோடி-அமித்ஷா.. தலையே காட்டாத ராகுல், சோனியா..!

Siva
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:00 IST)
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டு பக்கமே இன்னும் வராமல் இருப்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், புதுவையில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மற்றும் அமித்ஷா அடுத்தடுத்து தமிழகம் வர இருக்கும் நிலையில் தமிழக பக்கம் ராகுல் மற்றும் சோனியா காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஏற்கனவே சொதப்பல் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தான் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் கூட அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு தேசிய தலைவர்கள் யாரும் வராமல் இருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் இல்லாமல் இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களிலாவது ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்