Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு !

Webdunia
புதன், 26 மே 2021 (12:23 IST)
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 
 
ஆம், இந்திய அரசின் டிஜிட்டல் கொள்கையால் வாட்ஸ் ஆப் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு பறிபோகும் என இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதோடு, தனியுரிமை ரகசியம் காக்கப்பட வேண்டும் எனற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை வாட்ஸ் ஆப் தொடர்ந்துள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் விதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments