Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு !

Webdunia
புதன், 26 மே 2021 (12:23 IST)
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 
 
ஆம், இந்திய அரசின் டிஜிட்டல் கொள்கையால் வாட்ஸ் ஆப் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு பறிபோகும் என இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதோடு, தனியுரிமை ரகசியம் காக்கப்பட வேண்டும் எனற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை வாட்ஸ் ஆப் தொடர்ந்துள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் விதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments