Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்க்கு கொரோனா; எந்த தொற்றும் இல்லாமல் பிறந்த குழந்தை! – உ.பியில் ஆச்சர்யம்!

Webdunia
புதன், 26 மே 2021 (12:14 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதித்த பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தினசரி 2 லட்சம் சராசரியில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு உள்ளிட்டவையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்ப்பமான பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குழந்தையையும் பாதிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த தீபிகா திவாரி என்ற பெண் ஏற்கனவே அரிதான நோய் எதிர்ப்பு திறன்குறைவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். அவருக்கு திருமணமாகி கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை கொரோனா உள்ளிட்ட எந்த தொற்றும் இல்லாமல் ஆரோக்யமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதல்! பேச்சுவார்த்தை நடத்த உடனே வர சொன்ன நீதிபதி!

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments