Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெடிக்கல் மிராக்கிள்: 38 நாட்கள் வெண்டிலேட்டரில், 40வது நாள் டிஸ்சார்ஜ்

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (07:58 IST)
38 நாட்கள் வெண்டிலேட்டரில், 40வது நாள் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 38 நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நோயாளி ஒருவர் திடீரென நாற்பதாவது நாள் கொரோனா நோய் முற்றிலும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலைமைக்கு வந்துள்ளது பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியது. இதனை மெடிக்கல் மிராக்கிள் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அம்மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீரியசாக இருந்ததால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவர் கடந்த 38 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
அவரது உடல் நாளுக்கு நாள் மோசமாகி வந்த நிலையில் திடீரென 39வது நாள் அவரது உடல்நிலை தானாகவே தேற ஆரம்பித்தது. அதன் பின்னர் 40வது நாள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனை அடுத்து அவர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
38 நாட்கள் வெண்டிலேட்டரில் இருந்த ஒரு கொரோனா நோயாளி திடீரென 40வது நாள் டிஸ்சார்ஜ் செய்யும் அளவுக்கு முன்னேறி இருப்பது பெரும் மருத்துவ உலகை பெரும் ஆச்சரியத்தை அளித்து விட்டதாகவும் இது உண்மையிலேயே மெடிக்கல் மிராக்கிள் என்றும் அந்நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments