Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தல்: 1 மணி நிலவர வாக்குபதிவு விவரம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:22 IST)
கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 44.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
 
உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் 55 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
 
உத்தராகண்டில் உள்ள 70 தொகுதிகளும், கோவாவில் உள்ள 40 தொகுதிகளும் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 44.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
 
உத்திரப்பிரதேச சட்டமன்ற 2 ஆம் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 39.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 35.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments