Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 57,778 வேட்பாளர்கள் போட்டி!

Advertiesment
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 57,778 வேட்பாளர்கள் போட்டி!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:23 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 
 
அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 12,607 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி!