Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ பேச ... பிரதமர் மோடி மேசையை தட்ட ... மாநிலங்களவையில் ஆரவாரம் !

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (18:14 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  23 ஆண்டுகளுக்கு பின்னர் ,திமுக சார்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழில் உறுதிகூறி  பதவிபிரமாணம் செய்து கொண்டார்.
 
இதனைத்தொடர்ந்து இந்தியாவில் மூடப்பட்டுள்ள நூற்பு ஆலைகள் குறித்த வினாவின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோம் துணைக்கேள்வி எழுப்பி பேசினார். அதில், 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக எனது முதல் கேள்வி வாய்ப்பு கொடுத்தற்காக நன்றி என்று தெரிவித்தார்.
 
இவ்வாறு வைகோ கூறிய பின்னர், பாரத பிரதமர் மோடி தன் இருக்கையில் அமர்ந்தவாறு மேசை தட்டி வைகோவின் பேச்சை வரவேற்றார்.
 
இந்தியாவின் 9 பிரதமர்களை சந்தித்து பாராளுமன்றத்தையே தன் பேச்சால் நடுநடுங்கச் செய்த வைகோவுக்கு பாராளுமன்ற புலி என்ற பெயரும் உண்டு.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments