Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலை கிடைக்காததால் விரக்தி..! – ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:20 IST)
அரசு வேலைக்கு நீண்ட காலமாக முயற்சித்தும் கிடைக்காததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் ஆக்ரா நகரில் உள்ள நக்லா தல்ஃபி என்ற பகுதியை சேர்ந்தவர் இளைஞர் கர்மவீர் சிங். நீண்ட ஆண்டுகளாக கர்மவீர் சிங் அரசு வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். அதேபோல இந்திய ராணுவத்த்தில் இணைவதற்காகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் நீண்ட காலமாகியும் தனக்கு வேலை கிடைக்காததால் கர்மவீர் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் யமுனை நதிக்கு சென்ற அவர் தனக்கு அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், குடும்பத்தினர் கர்மவீரை தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் யமுனை ஆற்றங்கரையில் கர்மவீரின் செல்போன் மற்றும் காலணியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆற்றில் கர்மவீரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments