Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய போராட்டத்தில் வன்முறை! – 136 பேர் கைது!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (08:46 IST)
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக தலைமை நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று நாடு முழுவதும் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்திலும் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

உத்தர பிரதேசத்தில் மொரதாபாத், பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே எழுந்த மோதலில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. கற்களை போராட்டக்காரர்கள் வீசியதால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடராதிருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments