Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பணமதிப்பிழப்பு: ஆனால், இது வேறு....

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (19:04 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவையே கதிகலங்க விட்டார். இந்நிலையில், மீண்டும் பணமதிப்பிழப்பு என்றவுடன் அதிர்ச்சி அடையே வேண்டாம். இது வேறு தரப்பினரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த பிச்சைக்காரர்கள், 1 ரூபாய் நாணயத்தை பணமதிப்பிழப்பு செய்துள்ளனர். அதாவது, அங்குள்ள பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். 
 
இதுபற்றி பிச்சைக்காரர்கள் தெரிவித்தபோது, தற்போதைய 1 ரூபாய் நாணயம் மிக சிறியதாக உள்ளது. இதனால் கடைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். எனவே, நாங்களும் இனி 1 ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 
 
பொதுவாக பிச்சைகாரர்களுக்கு 1 ரூபாய் வழங்குவதை வழக்கமாக மக்கள் அனைவரும் வைத்துள்ளதால், இனி இரண்டு ரூபாய் முதல்தான் உத்தரப்பிரதேசத்தில் தானம் துவங்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments