Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு பாஸ் செய்தால் 10ஆயிரம் ரூபாய். உபி முதல்வர் அதிரடி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (05:08 IST)
உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்ற ஆதித்யநாத் யோகி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



 



இதன்படி  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிப்பதாக கூறியுள்ளார். இந்த ரொக்கப்பரிசு மாணவர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தவே இந்த பரிசு அறிவிப்பு என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட  உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா அறிவித்தார். அவர் கூறியதாவது:

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை அளிக்கப்படும். மெரிட் அடிப்படையில் மாணவிகளின் பெயர் பட்டியல் பெறப்பட்டு முதல் ஒரு லட்சம் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்' என்று கூறியுள்ளார்.

உபி அரசின் இந்த அறிவிப்பால் மாணவிகள் குஷியில் உள்ளனர்.


 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments