Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா பரோல் மனு: சிறை நிர்வாகம் அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (00:11 IST)
அதிமுக அம்மா அணியில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை சரிசெய்ய வெளியே வரவிரும்பிய சசிகலா, பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார்.  சென்னையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ததார்.



 


ஆனால் இந்த மனுவை பரிசீலனை செய்த சிறை நிர்வாகம் ரத்த சொந்தங்களில் நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ள பரோல் வழங்கப்படும் என்றும் அண்ணன் மகன் திருமணத்திற்கு பரோலில் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறி அதிரடியாக பரோல் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஒரு நாள் பரோல் கேட்டிருந்தால் சிறை நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் ஆனால் மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கோரியிருந்ததால் பரோல் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  ஏற்கெனவே, சசிகலா தனது அக்கா மகன் மகாதேவன் மறைவை ஒட்டி இறுதி அஞ்சலி செலுத்த பரோல் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்