பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 5 டிசம்பர் 2025 (08:12 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பான் மசாலா பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்படாது. மாறாக, இது பான் மசாலா போன்ற பொருட்கள் மீது மட்டுமே விதிக்கப்படும்.
 
இந்த செஸ் மூலம் வரும் வருவாய், சுகாதார திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இந்த வரி விதிப்பு ஜிஎஸ்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
பான் மசாலா மீது நேரடியாக கலால் வரி விதிக்க முடியாததால், உற்பத்தி நிலையில் வரி விதிக்கவே இந்தத் தனி செஸ் மசோதா கொண்டுவரப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments