Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ..ஊன்னா ஆணுறுப்பை வெட்டிறாங்களே! அச்சத்தில் ஆண்கள்

Webdunia
வியாழன், 25 மே 2017 (04:53 IST)
கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலிச்சாமியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவருடைய ஆணுறுப்பை கல்லூரி மாணவி ஒருவர் வெட்டியதாக வந்த செய்தியையும், அந்த பெண்ணை கேரள முதல்வரே பாராட்டியதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்'



 


இந்த நிலையில் கள்ளக்காதல் பிரச்னை காரணமாக கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி குறித்த செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதியை சேர்ந்த முகம்மது நவுசத்திற்கும், பிகார் மாநிலம் லக்ஷ்மிசராய் பகுதியை சேர்ந்த ருக்பானு என்ற பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. ஆனால் ருக்பானு ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததால் கணவரை பிடிக்கவில்லை. மேலும் கணவருக்கு தெரியாமல் காதலனுடன் அவர் தொடர்பிலும் இருந்துள்ளார்.

இதுகுறித்து கணவர் முகம்மது நவுசத்திற்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவர் முகம்மது தூங்கும்போது அவருடைய ஆணுறுப்பை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். வலியால் துடித்த முகம்மது தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் ருக்பானுவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்