Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்லை….அது ஒரு தனியார் நிறுவனம்- சுவேந்து அதிகாரி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (19:44 IST)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்லை…அது ஒரு தனியார் நிறுவனம் என்று பாஜக நிர்வாகி சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி இரவில் ஒடிஷாவில் பாலசோரில்  கோரவிபத்து நடைபெற்றது. இந்த விபத்தில், 288  பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து நடைபெற்ற இடத்தை பிரதமர் மோடி,  ரயில்வேதுறை அமைச்சர் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வைவிட்டனர்.

இந்த விபத்து பற்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி,  இன்று கூறியதாவது:
‘’ஒடிஷா ரெயில் விபத்திற்கு பின்னணியில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், ஒடிஷா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களை  நேதாஜி உள்ளரங்க மைதானத்திற்கு  நாளை வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் முன்னிலையில், உரையாற்றி காயமடைந்த நபர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகள் வழங்குவார். இதற்காக அவர்களை கொல்கத்தா வரும்படி கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு தனியார் நிறுவனம். அதன் தலைவர் மம்தா பானர்ஜி, மேலாண் இயக்குனர் அபிசேக் பானர்ஜி  என்றும், அதன் உரிமையாளரை நான் தோற்கடித்துவிட்டேன் ‘’ என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments