Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலை – மக்கள் அதிருப்தி !

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (08:14 IST)
வெங்காயத்தின் விலை உயர்ந்ததை அடுத்து இப்போது தக்காளியின் விலையும் கணிசமாக உயர்ந்திருப்பது மக்களுக்கு சுமையாகியுள்ளது.

மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழையின் காரணமாக உற்பத்தி குறைந்தது.வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை அதிகமானது. சில இடங்களில் 100 ரூபாய் வரை விற்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்து நிலைமையை ஓரளவு சமாளித்தது. அதையடுத்து வெங்காய விலை கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் அடுத்ததாக தக்காளியின் விலை அதிகமாகி வருவது பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 40 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை தற்போது 54 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் 54 ரூபாயாகவும், கொல்கத்தாவில், 60 ரூபாய்க்கும் டெல்லியில் ஒரு கிலோ ரூ.80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments