Publish Date: Tue, 26 Jul 2022 (10:10 IST)
Updated Date: Tue, 26 Jul 2022 (10:11 IST)
கடந்த வாரம் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் இந்த வாரம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்து சுமார் 400 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 55 ஆயிரத்து 380 என்ற நிலையை வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையில் சுமார் 115 புள்ளிகள் குறைந்து 16520 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தைகள் மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்
என்று கூறப்படுகிறது
இருப்பினும் இந்த வார இறுதியில் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்