Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்கத்தில் தொடங்கியது 8வது கட்ட தேர்தல்: பலத்த பாதுகாப்பு

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (07:37 IST)
தமிழகம், புதுவை, கேரளா, அசாம் ஆகிய 4 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ஏழு கட்ட தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 8அம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
 
இன்று காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 35 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது என்பதும் தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது 
 
இன்றுடன் 5 மாநில தேர்தல் முடிவடைவதை அடுத்து, பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments