Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஊரடங்கு… திருப்பதி லட்டு விற்பனை தொடக்கம்- விலையில் அதிரடி மாற்றம்!

Webdunia
வியாழன், 21 மே 2020 (08:35 IST)
கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் திருப்பதி தேவஸ்தானத்துக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் 4000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாது என அறிவித்ததாக சர்ச்சைக் கிளம்பியது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அதில் ஏழுமலையான்  தரிசனம் கிடைக்காத நிலையில், ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதையடுத்து 50 ரூபாய் விலையுள்ள லட்டு மானிய விலையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும். ஊரடங்கு முடியும் வரை இந்த விலைக் குறைப்பு அமலில் இருக்கும். இது ஆந்திராவில் மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களிலும் கிடைக்கும்.

முன்பு மோல் அளவு இல்லாமல் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் ஒருவர் வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஓரிரு தினங்களில் லட்டு விற்பனைத் தொடங்கும்’ என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments