Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவை விட கொடுமையானது அம்பான் புயல்: முதல்வர் மம்தா பானர்ஜி

கொரோனாவை விட கொடுமையானது அம்பான் புயல்: முதல்வர் மம்தா பானர்ஜி
, வியாழன், 21 மே 2020 (07:01 IST)
கொரோனாவை விட கொடுமையானது அம்பான் புயல்
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அழிவுவை விட அம்பான் புயல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் 
 
வங்கக்கடலில் உருவாகிய அம்பான் புயல் நேற்று மதியம் மேற்கு வங்க மாநிலத்திற்கும் மற்றும் வங்கதேச நாட்டிற்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன
 
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயலா மிக அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் மேற்குவங்க மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புயல் சேத மதிப்புகளை கணக்கிடவே 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் என்றும் கூறினார்
 
மேலும் இந்த புயலால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமான வீடுகள் பள்ளி கட்டடங்கள் தொழிற்சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளில் தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில்கள்: அட்டவணையை வெளியிட்ட ரயில்வே துறை